Posts

Showing posts from November, 2022

"நீ செலவிட்ட நேரம்"

Image
அன்று ஒரு விடுமுறை நாள், தன் மகனை விளையாட வைப்பதற்காக, ஒரு தந்தை தன் மகனை விளையாட்டு மைதானத்திற்கு அழைத்து வந்தார். அவர் தன் மகனிடம், ஜோ, பார்த்து கவனமாக விளையாட வேண்டும், என சொல்லிவிட்டு அங்கிருந்த ஒரு கல்மேசையின் மீது அமர்ந்தார். அவன் சிறிது நேரம் விளையாடிவிட்டு,  தன் அப்பாவிடம் வந்து, அப்பா, நாம் பதநீர் அருந்த செல்வோமா ? என்று கேட்டான். அவன் தந்தையும் சரி என பதில் அளித்தார்.பின்பு பதநீர் அருந்தியவுடன்,   அப்பா, கோவிலுக்கு செல்வோமா? என்று கேட்டான். அதற்கும் அவர் தந்தை சரி என பதில் அளித்தார். கோவிலில் ஜெபித்து விட்டு வெளியே வரும் பொழுது,  அப்பா, கடல் கரையோரம் சிறிது நேரம் நடப்போமா? என்று கேட்டான். அதற்கும் அவன் தந்தை சிரித்துக்கொண்டே தலையாட்டினார். பிறகு வீட்டிற்கு வரும் பொழுது, இவ்ளோ நேரம் எங்கு சென்றுவிட்டு வருகிறீர்கள்? என தன் அம்மா கேட்க, தான் சுற்றி வந்த அனைத்து இடங்களையும் தன் அம்மாவிடம் சொன்னான். பிறகு அவள் தன் கணவரிடம், எதற்காக இவ்வளவு நேரம்  வெளியே செலவிட்டீர்கள்? என்று கேட்டாள். அதற்கு அவளின் கணவன், நான், நம் மகன் வயதில் இருக்கும் ...

THE HUMAN'S SIN

Image
முதன் முதலில் ஆதாம் மற்றும் ஏவாளின் வழியாக பாவம் இவ்உலகில் தோன்றியதது. ஆனால் அவர்களின் வழியாகவே பல புனிதர்கள் தோன்றினார்கள் என்பது உண்மை.  இன்றைய காலகட்டத்தில் நாம் நம் வாழ்க்கையை பாவத்தோடே சேர்ந்து வாழ்ந்து வருகிறோம் ,அது நம் இயற்கையாகவே மாறிவிடுகிறது ஆனால், ஒரு மனிதர் தம் இயல்பு வாழ்க்கையில் இருந்து மாறும் பொழுது தான் அது பாவமாக மாறுகிறது ,ஏனெனில் கடவுள் நம் அனைவரையும் அவர் சாயலில் படைத்தார் , கடவுளின் இயல்பு நாம் அனைவருக்கும் உண்டு ஆகவேதான் புனிதராகும் வாய்ப்பு நாம் அனைவருக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது . முன்மதியுடையோர், தான் அணையாத நெருப்புக்குள் புகாதவாறு, தான் செய்த பாவங்களுக்காக கடவுளிடம் மன்னிப்பு கேட்பார், ஏனெனில் நொறுங்கிய நெஞ்சமே கடவுளுக்கு ஏற்ற பலி  என நாம் அறிவோம். கடவுளிடமிருந்து நமக்கு ஒரு சட்டம் உண்டு அச்சட்டத்தை மீறுவது பாவமாகும். பாவம்  நம்மிடம் இல்லையென்று நினைத்தால் நம்மை நாம் ஏமாற்றிக் கொள்வதற்கு சமம். ஒருவேளை சினமுற்று பாவம் செய்ய வேண்டிய சூழ்நிலை வந்தால் காத்திருங்கள், பொழுது சாய்வதற்குள் உங்கள் சினம் தணிந்துவிடக்கூடும். பாவம் செய்ய சிந்...

🐕 ஒரு அம்மா தாயின் அவலநிலை

Image
         அல்ல, மனிதனின் குணம் என்னிடம் அல்ல. ஒரு முறை உன் மீது அன்பு வைத்துவிட்டால், நீ செல்லும் இடமெல்லாம் உன்னுடன் வருவேன், நீ நிற்கும் பொழுதெல்லாம் உன் காலடியில் இருப்பேன். உன் பங்கில் ஒரு சிறிய பருக்கை கொடுத்தாலும், மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வேன். உன்னுடன் விளையாடுவதில் மிகுந்த ஆர்வம் காட்டுவேன். அனைத்திற்கும் மேலாக, உனக்காக என் உயிரையும் கொடுக்க தயங்க மாட்டேன்.                                                -நாய் நாம் அனைவருக்கும் நாயை பிடிக்கும். ஒரு சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம், ஆனால் பிடிக்காமலிருக்கும்பொழுது கூட அதன் மீது  பரிவு காட்டுவதுண்டு. நாயினால் நமக்கு நன்மையும் இருந்திருக்கலாம் தீமையும் இருந்திருக்கலாம், ஆம் நன்மையை விட தீமை நடப்பதே அதிகம். சில நேரங்களில் சிலருக்கு இதன் காரணமாகவோ நாயை வெறுத்திருக்க கூடும். மனிதர்களை கடிப்பது,வாகனம் ஓட்டும் பொழுது திடீரென நடுவில் வருவது, இவ்வாறு பல விதமான விபத்துகளை ஏற்படுத்த...

A LOVE SPOT

             ''A LOVE SPOT''      IS IT WAS LOVE?  THE PRINCIPAL DAY WHEN I SAW IN COLLEGE,IT WAS SECOND WHICH MAKE THE EXISTENCE STOP FOR SOME TIME ME WITH MY 3 COMPANIONS SITTING ON LAST SEAT SO I CAN GET A COMPLETE PERSPECTIVE ON YOU The ENTIRE DAY WITHOUT KNOWING YOU. MY ATTENTION WAS ON YOU… AND TOTALLY YOU WAS LOOKING LOVELY IN STRAIGHTFORWARDNESS… AND I WAS NEARLY LOST IN YOU. I DONT EXPERTISE TO PROPOSE YOU ,I WISH YOU FIGURE OUT IT BY SEEING INTO MY EYES. I MAINTAIN THAT SHOULD EXPRESS SOMETHING TO YOU YET IN THE WAKE OF LOOKING EACH EVERY TIME I FAIL TO REMEMBER WHAT TO SAY… ITS IT AS AFFECTION OR SOMETHING DIFFERENT. FROM THAT THE IT FEEL SETTING OFF FOR COLLEGE ISN'T SIGNIFICANT Yet SEEING YOU MATTERS ALOT. YOU CAN SAY YOU MAY THE EXPLANATION OF MY GREAT PARTICIPATION ND THE DAY WHEN U NOT COME THE SCHOOL FEELS LIKE PRISON. FROM THAT DAY YOU ARE JUSTIFICATION FOR PARTICIPATION , WHEN I DONT FIND U ITS LIKE SAND IN DESER...

✝️ALL SOUL'S DAY✝️

                       இன்று நாம் அனைவரும் இறந்தவர்களின் ஆன்மாக்களின் நினைவு நாளாக  கொண்டாடுகின்றோம். இவ்வுலகில் நம்மோடு வாழ்ந்து மரித்த நம் தாய், தந்தை, சகோதர, சகோதரிகள், நண்பர்கள், உறவினர்கள், உடன் பிறந்தவர்கள், கணவன்,மனைவி, பிள்ளைகள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என அனைவருமே இவ்வுலகில் இருக்கும் பொழுது அனைத்து விதமான திருநாளையும் கொண்டாடி இருப்பார்கள், ஆனால் இன்று அவர்களுகே திருநாளாக அமைகிறது. இன்று மட்டுமே அவர்களை நினைக்க வேண்டிய நாளாகவும், அவர்களின் கல்லறைகளுக்கு செல்லுகின்ற நாளாகவும் இருக்கிறது. ஆனால் அவர்களை நாம் அவ்வப்பொழுது மறந்துவிடுகின்றோம் என்பதே நிதர்சனமான உண்மை. இறந்து போன அனைவருமே நிலை வாழ்வில் நுழைந்தார்கள் என கடவுளைத் தவிர நாம் அறிய இயலாது. அவர்களும் ஏராளமான ஆன்மாக்கள்  உத்தரிப்பு ஸ்தலத்தில் இருக்கக்கூடும். (இதுவே அவர்களின் கூக்குரலும் கெஞ்சலும்) என் அன்பார்ந்தவர்களே, என் உற்றார் உறவினர்களே, நான் பெற்ற செல்வங்களே, நான் பூவுலகில் இறந்தவுடன் கதறிக் கதறி அழுதவர்களே என்னைக் கல்லறையில் அடக்கம் பண்ண வந்...